புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
புதுமுக டைரக்டர் ஜெயக்குமார் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் கனல். இந்த படத்தில் பவீனா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சிங்கமுத்து, ரமேஷ்கண்ணா ஆகியோர் காமெடியன்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் காமெடி போலீசாக நடித்துள்ள அவர்கள் இருவரும் காமெடி ட்ராக்கில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்களாம்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஏலகிரி மலைப்பகுதியில் நடைபெற்றபோது, ஒருநாள் அங்குள்ள அருவியில் குளிக்கிற காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாராம் பவீனா. அப்போது ஒரு பெரிய மரத்தில் சென்று கொண்டிருந்த 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இவர் குளித்துக்கொண்டிருந்த இடத்தில் தேங்கிக்கிடந்த தண்ணீருக்குள் தொப்பென்று விழுந்ததாம்.
அதைப்பார்த்து அதிர்ந்து போன பவீனா அந்த இடத்திலேயே மயங்கி சாய்ந்து விட்டாராம். இதனால் அவரை அங்கிருந்து தூக்கிசென்று முதல் உதவி சிகிச்சை அளித்து மயக்கம் தெளிய வைத்திருக்கிறார்கள. ஆனபோதும் பாம்பை பார்த்த அதிர்ச்சியில் அன்றையதினம் நடிக்கிற மூடில் அவர் இல்லாததால் அவரை தங்குமிடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு மற்ற காட்சிகளை படமாக்கினாராம் டைரக்டர் ஜெயக்குமார்.