ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மனதில் உறுதி வேண்டும் படத்துக்காக கே.பாலசந்தரால் கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர் நடிகர் ரமேஷ்அரவிந்த். அதன்பிறகு வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர். பின்னர் கமலுடன் இணைந்து சதிலீலாவதி படத்திலும் நடித்தார். ஆனபோதும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அவர் பரவலாக நடித்து வந்ததால் தமிழில் அவரால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.
அதோடு, கன்னடத்தில் ராம ஷாம பாமா என்ற படத்தை முதன்முதலாக இயக்கி நடித்த ரமேஷ்அரவிந்த், அந்த படத்தில் கமலையும் நடிக்க வைத்தார். அதையடுத்து சத்யவான் சாவித்ரி, ஆக்சிடென்ட் உள்பட சில படங்களை தானே இயக்கி நடித்தார். இந்தநிலையில்தான், தற்போது கமலை வைத்து உத்தமவில்லன் படத்தை இயக்கியிருக்கிறார் ரமேஷ்அரவிந்த். அதோடு தன்னை தமிழுக்கு கொண்டு வந்த கே.பாலசந்தரையும் இந்த படத்தில் நடிக்க வைத்து பெருமை சேர்த்திருக்கிறார் ரமேஷ்அரவிந்த். தற்போது உத்தமவில்லன் ரிலீசுக்கு தயாராகி விட்டதால், அடுத்தடுத்து தமிழில் ஒருநிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அவர், யாராவது இளவட்ட ஹீரோக்கள் கால்சீட் கொடுத்தால் படம் இயக்கவும் தயாராக இருக்கிறாராம். உத்தமவில்லன் திரைக்கு வந்தபிறகுதான் அதற்கான முயற்சிகளில் இறங்க திட்டமிட்டிருக்கிறாராம் ரமேஷ்அரவிந்த்.
மேலும், இந்த ரமேஷ்அரவிந்த் கன்னட நடிகராக இருந்தபோதும், அவர் தமிழர்தான். தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணம்தான் அவரது பூர்வீகமாகும்.