ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெண்களின் கடந்த காலம் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். பாலிவுட்டில், சமீபத்தில் வெளியான ஹன்டர் படத்தில், ராதிகா ஆப்தே, பல்வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருக்கும் வகையிலான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர், அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த கேரக்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராதிகா ஆப்தே கூறியதாவது, பெண்கள் மட்டுமல்ல, ஆண்களின் கடந்த கால வாழ்க்கை கசப்பு மிக்கதாகவே இருக்கும், அதை, தற்போதைய நேரத்தில் அலசி ஆராய்வது என்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். என்னைப் பொறுத்தவரை, கடந்த காலம் குறித்து நிகழ்காலத்தில் யோசிப்பதையே நான் தவறு என்றே கூறுவேன் என்று ராதிகா கூறினார்.