ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோலிவுட்டில் நீண்டகாலமாக படங்களை தயாரித்து வந்த ஏவிஎம், பிரசாத், ஜெமினி உள்ளிட்ட பல முன்னணி பட நிறுவனங்கள இப்போது படங்கள் தயாரிப்பதையே நிறுத்தி விட்டன. அதோடு சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவ்வப்போது முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் தயாரித்துக்கொண்டிருந்த சில கார்பரேட் நிறுவனங்களும் தயாரித்த படங்கள் எல்லாம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்ததால் இப்போது சினிமா பக்கமே வருவதில்லை. அதன்காரணமாக, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றி மாறன் உள்பட பல டைரக்டர்கள் தயாரிப்பாளர்களாகி வட்டனர். அதேபோல் விஷால், ஆர்யா, தனுஷ், விஜயசேதுபதி உள்பட சில நடிகர்களும் தயாரிப்பாளர்களாகியிருக்கின்றனர். சிலர் தாங்கள் நடிக்கிற படங்கள் மட்டுமே தயாரித்தபோது சிலர் மற்ற நடிகர்களையும் தங்கள் கம்பெனி படத்ல் நடிக்க வைத்து வருகின்றனர்.
இதில் தனுஷ் முன்னோடியாக இருக்கிறார். தனது தயாரிப்பில் தானும் நடித்துக்கொண்டு சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்களையும் நடிக்க வைத்து வருகிறார். அதோடு காக்கா முட்டை படத்தைகூட வெற்றிமாறனுடன் இணைந்து தயாரித்தார். மேலும் அடுத்தபடியாகவும் தொடர்ச்சியாக படங்களை தயாரிக்க கதைகளும் கேட்டு வைத்திருக்கிறார். இதனால், தற்போது கோலிவுட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் சில நடிகைகள் தனுஷை அணுகி அவரது வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வருகின்றனர். அவர்களில் அட்டகத்தி நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீதிவ்யா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாம்.