இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் கவனிக்கப்படும் வேடங்களில் நடித்திருந்தபோதும், ஆண்ட்ரியாவுக்கு கோலிவுட்டில் ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்து வந்தது. அதனால்தான் அவ்வப்போது மலையாள சினிமாவிலும் நடித்துக்கொண்டு வந்தார். அப்படி அங்கு ஒரு இடத்தை அவர் பிடிக்க இருந்த நேரம்தான், அன்னயும் ரசூலும் என்ற படத்தின் பப்ளிசிட்டிக்காக ஆண்ட்ரியாவை தான் காதலிப்பதாக பரபரப்பு செய்தி வெளியிட்டார் அப்பட நாயகன் பஹத்பாசில்.
இதனால் டென்சனான ஆண்ட்ரியா அப்படக்குழுவினரிடம் கோபித்துக்கொண்டு வந்தநேரம்தான், விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என கமலுடன் தொடர்ச்சியாக 3 படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். அதோடு, சுந்தர்.சியின் அரண்மனை படத்தில் பேயாக நடித்து பி அண்ட் சி சென்டர் ரசிகர்களையும் கவர்ந்தார்.
அதன்காரணமாகத்தான் ஜெய்யின் வலியவன் படத்தில் சிங்கிள் கதாநாயகி நடித்த ஆண்ட்ரியா, கவர்ச்சி ஏரியாவிலும் கலக்கியுள்ளார். அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு அவருக்கு 80 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் கூடிய சீக்கிரமே ஒரு கோடியை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று தன்னை புதிய படங்களுக்காக தொடர்பு கொள்ளும் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஆண்ட்ரியா. அதோடு முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் ஆண்ட்ரியா.