தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் ஹோக்லியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆனால் இப்போது அது விஷயம் அல்ல, உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியை தழுவி, உலககோப்பை போட்டியிலிருந்து வௌியேறியது. இந்திய அணி தோல்வி அடைந்ததில் இருந்து அனுஷ்கா சர்மாவையும், விராட் ஹோக்லியையும் சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர் ரசிகர்கள்...
இந்நிலையில், அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள் என்று ரசிகர்களை தூண்டுவதோடு தனது ஆவேசத்தையும் கொட்டி தீர்த்துள்ளார் இந்தி நடிகர் கமல் ரஷித்கான்.
இதுகுறித்து கமல் ரஷித்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, விராட் ஹோக்லி சரியாக ஆடாததற்கு அனுஷ்கா சர்மா சிட்னி போனது தான் காரணம், எனவே ரசிகர்கள் அவரது வீட்டின் மீது கல் எறியுங்கள், அவரது படங்களையும் புறக்கணியுங்கள் என்று கூறியுள்ளார்.
ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது நீரோ மன்னர் பிடில் வாசித்து கொண்டிருந்தாராம்... என்று ஒரு பழமொழி சொல்வார்களே... அதுபோல், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை, ஹோக்லியையும், அனுஷ்காவையும் சமூக வலைதளங்களில் தீட்டி தீர்த்து வரும் வேளையில், இருவரும் ஜோடி சேர்ந்த படி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தனர்.