'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்களுடன் மட்டுமே மீண்டும் கூட்டணி சேருவார்கள் ஹீரோக்கள். விஜய்சேதுபதி இந்த விஷயத்தில் விதிவிலக்கு.
அவர் நடித்த தோல்விப்படமான பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, மெல்லிசை, ஆரஞ்ச் மிட்டாய் என அரைடஜன் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருப்பது அருண்குமார் இயக்கும் படத்தில்தான். இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி! அதற்காக விரைவில் போலீஸ் கட் முறுக்கு மீசை என தன் கெட்டப்பை மாற்ற முடிவு செய்திருக்கிறார். இயல்பிலேயே மற்றவர்களுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் விஜய்சேதுபதி.
பீட்சா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசனுக்கு தற்சமயம் சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் இல்லை.
இதை தெரிந்து கொண்ட விஜய்சேதுபதி இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசனை சிபாரிசு செய்திருக்கிறார்.