ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் படம் நண்பேண்டா. ராஜேஷ்.எம் உதவியாளர் ஏ.ஜேகதீஷ் இயக்கியுள்ளார். உதயநிதியுடன் நயன்தாரா, சந்தானம், ஷெரீன் நடித்துள்ளனர். வருகிற 2ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. இதனால் உதயநிதி வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் நடிக்கும் 3வது படம் இது. மீண்டும் நயன்தாரா என்னுடன் நடிக்கிறார். எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன ஈகோ மோதல்தான் கதை. எந்த ஆபாச காட்சிகளோ, ஆபாச வசனங்களோ கிடையாது. சுத்தமான ரொமாண்டிக் காதல் படம். முகம் சுழிக்க வைக்கிற மாதிரி ஒரு காட்சிகூட கிடையாது. அதனால்தான் தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்தனர்.