பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'நண்பேன்டா' படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த ஜெகதீஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தைப் பற்றிப் பேசும் போது படத்தில் நடித்துள்ள உதயநிதி, நயன்தாரா, சந்தானம் அனைவரையும் மிகவும் மரியாதையுடனும், பெருமையாகவும் பேசுகிறார் இயக்குனர் ஜெகதீஷ்.
“ஒரு கல் ஒரு கண்ணாடி' சமயத்துல இருந்தே எனக்கு உதயநிதி சார்கிட்ட உதவி இயக்குனரா நல்ல பெயரை வாங்கியிருக்கேன். அப்ப இருந்தே அவருக்கு என்னைப் பிடிக்கும், தனியா படம் பண்ணணும்னு வந்தீங்கன்னா எனக்கும் கதை சொல்லுங்கன்னு சொல்லியிருந்தாரு. அப்பவே அவருக்கு இந்தப் படத்தோட கதையைச் சொன்னேன். ஆனால், 'இது கதிர்வேலன் காதல்' படம்தான் அவரோட இரண்டாவது படமா வர வேண்டியதாயிடுச்சி. இந்தப் படத்தைத்தான் அவர் இரண்டாவது படமா பண்ண நினைச்சிட்டிருந்தாரு. இந்தப் படத்துல உதயநிதி சார் டான்ஸ், நடிப்புன்னு எல்லாத்துலயும் அசத்தியிருக்காரு.
அப்புறம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் இவங்கள்லாமும் படத்துல ஒரு கலக்கு கலக்கியிருக்காங்க. இந்தப் படத்தை குடும்பத்தோட, வந்து இந்த விடுமுறையில கலகலப்பா கொண்டாட்டமா பார்த்து ரசிக்கலாம்,” என்றார்.