டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் கடந்த சில வருடங்களாக அங்குள்ள ரசிகர்களை தூங்க விடாமல் தவிக்க வைத்த சமந்தா, இப்போதுதான் அவருடைய பார்வையை தமிழ்ப் பக்கம் திருப்பியிருக்கிறார். சூர்யா, விஜய் ஆகியோருடன் நடித்ததைத் தொடர்ந்து விக்ரமுடன் தற்போது '10 எண்றதுக்குள்ளே' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தான் கடினமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சமந்தா சொல்லியிருக்கிறார். இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்தப் படத்தின் கதாபாத்திரம்தான் மிகவும் கடினமானது. 2015ல் இன்னும் இம்மாதிரியான பல கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா இதுவரை நடித்துள்ள பல தெலுங்குப் படங்கள் அவருக்கு வெற்றிகரமான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. ஆனாலும், அதிலெல்லாம் அவர் ஈஸியாகவே நடித்துவிட்டார் போலிருக்கிறது, அவருடைய நடிப்புத் திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை என்றும் தெரிகிறது.