ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கதிர்வேலனின் காதல் சறுக்கிய பிறகு நண்பேண்டாக்களின் துணையுடன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். நயன்தாரா, சந்தானம், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என அவரது ஆஸ்தான நிலைய வித்தவான்கள் இதிலும் உண்டு. இயக்குனர் மட்டும்தான் ராஜேஷ்.எம்முக்கு பதில் அவரது சீடர் ஜெகதீஷ். ஏப்ரல் 2ந் தேதி படம் வெளிவருகிறது. நண்பேண்டாவின் கதை இதுதான்.
உதயநிதி, சந்தானம், கருணாகரன் முன்று பேரும் தஞ்சையை சேர்ந்தவர்கள், பக்கத்து பக்கத்து தெருக்காரர்கள். மூன்று பேரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். உதயநிதிக்கும், சந்தானத்துக்கும் கருணாகரனை கேலியும், கிண்டலும் செய்வதுதான் வேலை. ஒரு நாள் வந்த சண்டையில் கருணாகரன் விலகி பள்ளியை விட்டே போய்விடுகிறார். உதயநிதியையும், சந்தானத்தையும் பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். இது பிளாஷ் பேக் கதை.
நிகழ்காலத்தில் உதயநிதி வேலை வெட்டி இல்லாமல் இருப்பார். சந்தானம் திருச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். வேலை இல்லாத உதயநிதி தினமும் தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு சென்று சந்தானம் செலவில் ஜாலியாக இருந்து விட்டு வருவார். இந்த சூழ்நிலையில் அவர்கள் பகுதிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் கருணாகரன். அதிகார பலத்துடன் இருக்கும் கருணாகரன், அப்பாவிகளாக இருக்கும் உதயநிதியையும், சந்தானத்தையும் எப்படி பழிவாங்குகிறார். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. இதில் உதயநிதியின் பெயர் சத்யா, சந்தானத்தின் பெயர் சிவக்கொழுந்து, கருணாகரனின் பெயர் இன்ஸ்பெக்டர் தங்கதுரை.