கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
முன்னாள் கதாநாயகியான மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்', விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்', பாபி சிம்ஹாவுடன் 'பாம்பு சட்டை' என 3 படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்!
தமிழில் கதாநாயகி பஞ்சம் தலவிரித்தாடும் சூழலில் அடுத்து முதல்வரிசை கதாநாயகி ஆகும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு உள்ளது.
அதற்கான அறிகுறியாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை.
இந்நிலையில், ஜீவா நடிக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் நடிக்கவும் கீர்த்திக்கு அழைப்பு வந்துள்ளது.
'யாமிருக்க பயமே' படப் புகழ் டீகே இயக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவாவுடன் பாபி சிம்ஹா, இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கத்தான் கீர்த்திக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்!
அதனாலோ என்னவோ இப்படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி இன்னும் முடிவு செய்யவில்லையாம்!
ஜீவா நடித்த 'யான்' படம் உட்பட பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்திருப்பதால் அவருக்கு ஜோடியாக நடிப்பதை ரிஸ்க் என்று நினைக்கிறாராம்.