ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய்யை வைத்து 'ப்ரியமுடன்', 'யூத்' ஆகிய படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. பின்னர் 'ஜித்தன்' இரண்யன், மதுரைவீரன் என தொடர்ந்து பல படங்களை இயக்கினார். 'ப்ரியமுடன்', 'யூத்' படங்களில் வெற்றியை ருசித்த வின்சென்ட் செல்வா அடுத்தடுத்த படங்களில் வெற்றியை தவறவிட்டார்.
அதற்கான காரணத்தை ஆராயாமல் ஆருடக்காரர்களின் ஆலோசனையைக் கேட்டு இங்க என்ன சொல்லுது படத்தை இயக்கியபோது தனது பெயரை செல்வா என்று மாற்றினார். செல்வா என்ற பெயரில் ஏற்கனவே ஒரு இயக்குநர் இருக்கிறார் என்று தெரிந்தும் தன் பெயரை செல்வா என்று மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தினார்.
பெயரை மாற்றியும் இங்க என்ன சொல்லுது படம் வெற்றியடையவில்லை. இந்நிலையில் தற்போது தன் பெயரை ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றியுள்ளார்.
ப்ரியமுடன் ஷெல்வா என பெயரை மாற்றி தனது அடுத்த படமாக இப்போது 'அராத்து' திரைப்படத்தின் வேலைகளில் தீவிரம் ஆகியுள்ளார்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வட சென்னையை களமாகக் கொண்டதாம் இப்படம். இப்படத்தில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.