மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடை திறப்பு விழாக்களில் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஒரு பக்கம் வருமானமும் வரும் இன்னொரு பக்கம் திரண்டிருக்கும் ரசிகர்களைப் பார்க்கும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தமிழ்நாட்டில் கடை திறப்புகளில் நட்சத்திரங்கள் கலந்து கொள்வது ஓரளவுக்கு குறைவாகவே இருக்கும். ஆனால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தினசரி ஏதாவது ஒரு கடை திறப்பு விழாவில் யாராவது ஒரு நடிகை கலந்து கொண்டேயிருப்பார். அங்கு நட்சத்திரங்கள் மீது ரசிகர்களின் ஆர்வம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், பிரணீதா, அஞ்சலி என தெலுங்கில் இருக்கும் அனைத்து முன்னணி ஹீரோயின்களுமே கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் நடிகை பிரணீதா, விஜயவாடாவில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது எக்கச்சக்கமான கூட்டம் கூடி, பிரணீதாவையே நெருக்கித் தள்ளி விட்டார்களாம். சிலர் அவரைத் தொட்டுப் பார்க்கவும் முயன்றிருக்கிறார்கள். இதனால், கோபமடைந்த பிரணீதா, ரசிகர்கள் வட்டத்திற்குள் இருந்து வெளியேற மிகவும் சிரமப்பட்டாராம்.