ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பிக்சர் ஹவுஸ் மீடியா தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடித்து வருகிறார்கள். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனை நாயகியாக புக் செய்து வைத்திருந்த பிவிபி, தற்போது ஸ்ருதிஹாசன் மீதே ஒரு சிவில் மற்றும் க்ரிமினல் வழக்குகளை தொடர்ந்துள்ளது.
இதுபற்றி பிவிபி தரப்பிலிருந்து கூறும்போது, நாகார்ஜுனா மற்றும் கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கு நாயகி ஸ்ருதிஹாசனை நாங்கள் தேர்வு செய்து அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து அவரை கால்ஷீட் வாங்கி வைத்திருந்தோம், ஆரம்பத்தில் அவரிடம் உட்கார்ந்து அவரின் தேதிகளை பார்த்து அதற்கேற்ப எங்களின் படப்பிடிப்பு திட்டத்தை வகுத்து வைத்திருந்தோம், ஆனால் தற்போது ஸ்ருதிஹாசன் என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது எனக்கு தேதிகள் இல்லை என ஒரு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார், இது எங்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, இதன் காரணமாகவே நடிகை ஸ்ருதிஹாசன் மீது சிவில் மற்றும் க்ரிமினல் வழக்குகளை தொடர்ந்துள்ளோம் என்று கூறினார்.