ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அய்யாவழி படத்தை இயக்கிய நாஞ்சில் அன்பழகன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் நதிகள் நனைவதில்லை. இந்த படத்தில் மோனிகா, ரிஷா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்க, ஹீரோவின் தங்கையாக நடித்திருப்பவர் கல்யாணி நாயர்.
கேரளாவைச்சேர்ந்த இவர் மலையாளத்தில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்தவர், தற்போது நட்சத்திரம் என்ற படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறாராம். இதையடுத்து தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படும் கல்யாணி நாயர், சென்னையில் குடியேற வீடு பார்த்து வருகிறார்.
மேலும், தமிழில் முதல் படத்திலேயே தங்கையாக நடித்ததால் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களில் நடிக்கவே அழைப்பார்களே? என்று அவரைக்கேட்டால், இந்த படத்தைப்பொறுத்தவரை அண்ணன்-தங்கை பாசப்போராட்டத்தை மையமாகக்கொண்ட கதை என்றுதான் முதலில் என்னிடம் சொன்னார்கள். ஆனால் படத்தில் நடித்தபோதுதான் அது கதையில் ஒரு பகுதி என்பது தெரியவந்தது.
இருப்பினும் எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்தேன். அதோடு, அடுத்த ஹீரோயினி வேடங்களாகவே நடிப்பேன். குறிப்பாக கமர்சியல் கதாநாயகிக்கு தேவையான கிளாமர் காண்பித்து நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறும் கல்யாணி நாயர், நயன்தாரா பாணியில் ஒரு அதிரடி நடிகையாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதை கோலிவுட்டின் டைரக்டர்கள்தான் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்கிறார்.