ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
டைரக்டர் பேரரசு தான் இயக்கிய சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் மற்றவர்களின் படங்களில் நடித்ததில்லை. இந்த நிலையில், ரு படத்தில் அவரை நடிக்கஅழைத்தபோது, மற்றவர்களின் படங்களில் நடிக்கும ஐடியா இல்லையே என்று யோசித்தாராம்.அப்போது நீங்கள் இந்த படத்திலும் டைரக்டர் பேரரசுவாகவேத்தான் நடிக்கிறீர்கள் என்று அப்பட டைரக்டர் சொன்னதை அடுத்து கதை கேட்டாராம் பேரரசு.
அப்போது அவருக்கான கேரக்டர் திருப்தியாக இருந்ததால் நடிக்க ஓகே சொன்னாராம். மேலும், மொத்தம் 6 நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்த பேரரசு முதல் நாள் ஸ்பாட்டுக்கு சென்றபோது அவரை சக நடிகராக நினைக்காமல் டைரக்டர் என்று அனைவருமே ஒதுங்கியே நின்றார்களாம்.
அதையடுத்து, இந்த படத்தைப் பொறுத்தவரை நானும் ஒரு நடிகன்தான். அதனால் என்னையும் சக நடிகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் தன்னையும் இணைத்துக்கொண்டாராம் பேரரசு. அப்போது அவர்கள் குசுகுசுவென்று பேசுவதை காதுகளை தீட்டிக்கேட்ட பேரரசுவிற்கு ஒரு விசயம் புரிந்ததாம். அதாவது அவர்களெல்லாம் மற்ற டைரக்டர்களின் படங்களில் நடித்தபோது நடந்த சில நல்ல மற்றும் தவறான விசயங்களை சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்களாம். அதைக்கேட்ட பிறகுதான், இப்படித்தான் நம் படங்களில் நடிப்பவர்களும் மற்ற படங்களில் நடிக்கும்போது அங்கு நடந்த விசயங்களை பற்றி பேசி சிரித்திருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டாராம் பேரரசு.