'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே -என்ற பாடலை ஆட்டோகிராப் படத்துக்காக எழுதி தேசிய விருது பெற்றவர் பா.விஜய். கோலிவுட்டின் வித்தகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டு வரும் அவர், ஞாபகங்கள், இளைஞன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே ஓடவில்லை. இருப்பினும், ஹீரோவாக நடிப்பதை அவர் விடவில்லை. அதையடுத்து தகடு தகடு என்றொரு படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படம் எப்போதோ முடிந்து வியாபாரத்துக்கு வந்தபோதும், இன்னமும் விலைபோகவில்லை. அதனால் தொடர்ந்து விநியோகஸ்தர்களுக்கு ஷோ போட்டு காண்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
இந்தநிலையில், ஆரம்பத்தில் தகடு தகடு படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த பா.விஜய் இப்போது வியாபாரம் ஆகாமல் இருப்பதால் இந்த படத்தை நம்பிக்கொண்டிருக்க வேண்டாம் என்று ஒரு படத்தை தானே இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறாராம். ஆனால், இப்போதைக்கு அந்த விசயம் வெளியில் தெரிய வேண்டாம் என்பதால் எந்த செய்தியையும வெளியிடாமல் சீக்ரெட்டாக படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறாராம் அவர்.