தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுசாலமன் கயல் படத்தை எடுக்கும் போது மைனா அமலாபால் மாதிரி ஒரு நாயகியை மனதில் வைத்து நாயகி வேட்டை நடத்திய போது அதில் சிக்கியவர் தான் ஆனந்தி. மூக்கு முழியுமாக பக்காவான கிராமிய சாயலில் தோற்றம் உடைய இவர், கயல் படத்தை பெரிய அளவில் நம்பினார். நம்பிக்கை கலைந்தது. இந்நிலையில் அடுத்து திரைக்கு வர உள்ள சண்டிவீரனை பெரிய அளவில் நம்பி இருக்கிறார். இந்த படம் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் பிரேக் கொடுக்கும் என்கிறார் சண்டிவீரன் இயக்குனர் சற்குணம். நிலைமை இப்படியிருக்க, ஆனந்திக்கு மானேஜர் வேலைபார்க்கும் நபர் இவர் பெயரை சொல்லி அதிகம் லாபம் பார்த்துள்ளார். இந்த உண்மையை புரிந்துக் கொண்ட ஆனந்தி அவரை நீக்கி விட்டு எனக்கு தமிழ் நன்றாக பேசத் தெரியும் நானே பேமண்ட் பற்றி பேசி கொள்கிறேன் என்று தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார். இவரைப் போலவே ஏற்கனவே இனியா இந்த முடிவை எடுத்திருந்தார். நல்லவாயன் சம்பாதிக்க நாரவாயன் தின்ன கதையாம்.