டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஸ்வரூபம் படத்தை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார் கமல். ஆனால் அந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகும் அப்படத்தை தயாரித்துள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறது. இதுபற்றி இதற்கு முன்பு காரசாரமாக எதுவும் சொல்லாமல இருந்த கமல், சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில், விஸ்வரூபம்-2 படத்தை எதற்காக வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கே இன்னும் தெரியவில்லை என்று கூறினார்.
மேலும், உத்தமவில்லன் படத்தை ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் தொடங்கினோம். அந்த கதையை ரெடி பண்ணிவிட்டு ரமேஷ் அரவிந்தை இயக்கும்படி சொன்னேன். அதோடு எனது குருநாதர் கே.பாலசந்தர் அவர்களை எப்படியாவது ஒரு வேடத்தில் நடிக்க வைத்து விடவேண்டும் என்று கதை எழுதும்போதே திட்டமிட்டிருந்தேன். அதன்படி அவரையும் நடிக்க வைத்தேன். அந்த வகையில், என்னை சினிமாவில் ஆளாக்கியவரை என் படத்தில் நடிக்க வைத்த பெருமை எனக்கு கிடைத்தது.
இதேபோல், சினிமாவில், சிறுவனாக நடிக்கத் தொடங்கியபோது சிவாஜி அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவன் நான். அவரது மடியில் அமரும் பாக்கியம் பெற்ற நான், பின்னர் அவருடன் தேவர் மகன் படத்தில் நடித்தேன். எனக்கு அப்பாவாக அவர் நடித்து என்னை பெருமைப்படுத்தினார். அந்த வகையில், எனது சினிமா பயணத்தில் சிவாஜிகணேசனுடன் நான் நடித்த தேவர்மகனும், கே.பாலசந்தருடன் நான் நடித்த உத்தமவில்லனும் எனக்கு முக்கியமான படங்களாகி விட்டன என்றார் கமல்.