'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
சின்னத்திரையில் அண்ணி, செல்வம், தென்றல், திருமதி செல்வம் என மெகா தொடர்களில் நடித்தவர் தீபக். ஆனபோதும், சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பதே இவரது நோக்கமாக இருந்து வந்ததால், காதல் வைரஸ், சரோஜா, முன்தினம் பார்த்தேனே, உயர்திரு 420 ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த அவர், தற்போது வெளியாகியிருக்கும் இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றியும் பெற்று விட்டார்.
அதனால், இனிமேல் சின்னத்திரையை குறைத்துக்கொண்டு சினிமாவில் அதிக கவனம் செலுத்தவும் முடிவெடுத்துள்ள தீபக்கிற்கு, சிவகார்த்திகேயனும் தன்னைப்போலவே சின்னத்திரையில் இருந்து வந்தவர் இன்றைக்கு பெரிய ஹீரோவாகி விட்டார் என்பதால், தன்னாலும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.
அதன்காரணமாக, தனக்கு காமெடி படமே பெரிய ஹிட்டாக அமைந்திருப்பதால், அடுத்தபடியாக காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக கேட்டு வரும் தீபக், தண்ணில கண்டம் படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனின் நடிப்பு படத்துக்கு பெரிய ப்ளசாக அமைந்ததால் இனிமேல் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரையே காமெடியனாக நடிக்க வைக்கவும் முடிவெடுத்துள்ளாராம்.