அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் செளஜன்யாவும் ஒருவர். பெங்களூரு வாசியான இவருக்கு தமிழிலும் கொடிநாட்ட வேண்டும் என்கிற ஆசை அளவுக்கதிகமாக உள்ளதாம். அதனால்தான் கன்னட நடிகைகளான அட்டகத்தி நந்திதா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த அகிலா கிஷோர் போன்ற நடிகைகள் தமிழில் நடித்து வருவது போன்று தானும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று சோக்குசுந்தரம் என்ற படத்தில் நடித்தார்.
ஆனால், அந்த படம் செளஜன்யாவுக்கு கைகொடுக்கவில்லை. ஆனபோதும் அவரது தமிழ் சினிமா தாகம் விட்டபாடில்லை. எப்படியேனும் கோடம்பாக்கத்தில் நானும் கொடிநாட்டியே தீருவேன் என்று தொடர்ந்து படவேட்டை நடத்தி வந்த அவருக்கு சந்தோசத்தில் கலவரம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தில் ஓரளவு கிளாமராக நடிக்கவும் சம்மதம் தெரிவித்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் செளஜன்யா. ஆனால், ஸ்பாட்டுக்கு சென்று அவர் ஐந்து நாட்கள் நடித்த பிறகு, கூடுதலான கவர்ச்சியை அவரிடம் எதிர்பார்த்தார்களாம். ஆனால் அவர்கள் சொல்வது போன்று நடித்தால் ஆபாசமாகி விடும் என்பதால் மறுத்து விட்டாராம் செளஜன்யா.
இதையடுத்து நாங்கள் சொல்வது போன்று நடித்தே ஆக வேண்டும் என்று அவரிடம் வாக்குவாதம் செய்தார்களாம். அதையடுத்து நடிகைக்கும், டைரக்டருக்குமிடையே மோதல் நடைபெற்றிருக்கிறது. விளைவு, ஒரு பொய்யை சொல்லிவிட்டு பெங்களூர் சென்ற செளஜன்யா அதன்பிறகு அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரவே இல்லையாம். அதனால் அவரைத்தேடி பெங்களூர் விரைந்து சென்ற அப்படக்குழுவினர், பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனாலும், நான் இறங்கி வரமாட்டேன். நீங்கள்தான் இறங்கி வரவேண்டும் என்று தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறாராம் செளஜன்யா.