பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
62வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதும் வழக்கம் போலவே விருதுகளை வாங்காதவர்கள் குறைபட்டுக் கொள்வதும் ஆரம்பமாகிவிட்டது. ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும போதும் இப்படி நிகழ்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், கடந்த சில வருடங்களாகவே சில தமிழ்ப் படங்கள் உண்மையான தரத்துடன் படைக்கப்பட்டு வருகின்றன. ஹிந்தித் திரைப்படங்கள் பொதுவாக தேசிய விருதுகளை அதிகம் ஆக்கிரமிப்பதாகச் சொல்லப்பட்டாலும், தமிழைப் போல் அல்லாமல், அங்கும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்கள் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன.
தெலுங்கு, மலையாளப் படங்களை விட இந்த ஆண்டு தமிழ்ப் படங்கள் குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெற்றிருக்கின்றன. அதில் முக்கியமான சில விருதுகளும் இடம் பெற்றிருப்பது மற்ற மொழித் திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தியும் உள்ளது. தெலுங்கில் சிறந்த மாநில மொழித் திரைப்படம் தவிர வேறு எந்த விருதும் அங்கு கிடைக்கவில்லை. மலையாளத் திரையுலகத்திற்கும் மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகவே கமர்ஷியல் படங்கள்தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
தமிழில் சிறந்த மாநில மொழித் திரைப்படம் விருது பெற்ற 'குற்றம் கடிதல்' படமும் , சிறந்த குழந்தைகள் திரைப்பட விருது பெற்ற 'காக்கா முட்டை' படமும் இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. இதற்கு முன் இந்தப் படங்கள் சில திரைப்பட விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு, சில விருதுகளையும் பெற்றுள்ளன. ரசிகர்களின் பார்வைக்கு இந்தப் படத்தை விரைவில் திரையிட வேண்டும் என்பதே திரைப்பட ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அதை சம்பந்தப்பட்டவர்கள் உடனே செய்ய வேண்டும். அந்தப் படங்களின் விவரங்கள், புகைப்படங்கள் சம்பந்தப்பட்டவர்களால் அதிகம் பகிரப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.