தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் பங்கு பெறும் 2015ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கே இன்று பலர் ஆர்வமாக இருப்பார்கள். அலுவலகத்திற்கு வேலை போட்டு விட்டு கூட வீட்டில் கிரிக்கெட் பார்க்கும் அளவிற்கு நம்மவர்களுக்கு தீவிரமான ஆர்வம் உண்டு. அப்படியே அலுவலகத்திற்குப் போனாலும் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதற்கு இடையில்தான் அலுவலக வேலையையும் பார்ப்பார்கள்.
அப்படியிருக்க இன்று திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இன்றைய கிரிக்கெட் போட்டியால் காலை காட்சியும், மதியக் காட்சியும் கண்டிப்பாக பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமானதிலிருந்து இந்தியா விளையாடும் போட்டிகள் நடக்கும் தினங்களில் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வராத நிலையே இருந்தது.
இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டி மிக முக்கியமானதாகவும், அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரானதாகவும் இருப்பதால் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை கூட ஏற்படலாம் என்கிறார்கள். இந்த கிரிக்கெட் சீசன் முடிந்தால்தான் சம்மர் சீசன் ஆரம்பமானதும் சினிமா சீசன் ஆரம்பமாகும் என திரையுலக வட்டாரமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ற விதத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வரக் காத்திருக்கிறது என்கிறார்கள்.
சினிமாவுக்கு எத்தனையெத்தனை ரூபத்தில்தான் தடைகள் வருகிறது....!