'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லாத கதையைக் கூடத் தேடிப் பிடித்து சொல்லிவிடலாம் போலிருக்கிறது. ஆனால், படத்திற்குப் பொருத்தமான தலைப்பைப் தேடிப் பிடித்து சொல்வதுதான் கடினமான விஷயம் என்றாகிவிட்டது. சமீபகாலமாக பழைய ஹிட்டான படங்களின் தலைப்புகளையே படத்திற்கு வைப்பதும் ஒரு ஃபேஷன் ஆகி விட்டது. அதே சமயம் ஒரு படத்திற்குப் போட்டியாக மற்றொரு படத்தின் டைட்டில் என்றும் கூட சிலர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க 'காக்கி சட்டை' என்ற பெயரில் படம் வெளிவந்தது. 80களில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'காக்கி சட்டை' படத்தின் டைட்டிலை மீண்டும் அனுமதி பெற்று வாங்கி வைத்தார்கள். அதோடு அந்த டைட்டிலை வாங்கவே பல லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் என்றும் பேச்சு வந்தது. ரஜினிகாந்த் நடித்து ஹிட்டான படங்களின் டைட்டிலை மீண்டும் அப்டியே வைப்பதும், அல்லது மாற்றி வைப்பதும், அவர் நடித்த படங்கள் சிலவற்றை ரீமேக் செய்வதும் என்று கூட நடைபெற்று வந்தது. 'பில்லா, தில்லு முல்லு' ஆகிய படங்களை ரீமேக் செய்தார்கள்.
இப்போது ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த், ராதா நடித்து 1983ம் ஆண்டு வெளிவந்த 'பாயும் புலி' படத்தின் டைட்டிலை மீண்டும் வைத்திருக்கிறார்கள். விஷால் நடிக்க சுசீந்திரன் இயக்கும் படத்திற்குத்தான் இந்த டைட்டிலாம். இதை அதிகாரபூர்வமாக அறிவித்தும் விட்டார்கள்.
ஒரு பக்கம் விஜய் நடிக்க 'புலி' என்று ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்க, மறு பக்கம் வடிவேலு நடிக்க 'புலி' டைட்டிலை கிண்டலடிக்கும் விதமாகவும் 'எலி' என்று ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்க, விஜய்யின் 'புலி'க்குப் போட்டியாக 'பாயும் புலி' என்று வைத்துள்ளார்களோ என்று எண்ண வைக்கிறது. எப்படியோ பரபரப்பை ஏற்படுத்துவதில் டைட்டிலுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று அனைவருமே அறிந்திருக்கிறார்கள்.