டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவுக்கு அரசு விருது வழங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பல தனி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் தங்கள் விரும்பம் போல் விருது வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமா கலைஞர்கள் பெரிதும் மதிக்கிற விருது விஜய் அவார்ட்ஸ்தான். ஃபிலிம் பேர் அவார்ட்ஸ் தென்னிந்திய சினிமாவுக்கு உரியது. விஜய் அவார்ட்ஸ் தமிழுக்கு மட்டும் உரியது.
2014ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவை வழக்கம்போல நேரு உள்விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக நடத்த உள்ளது விஜய் டி.வி. ஏப்ரல் 25ந் தேதி நடக்க இருப்பதாக தற்போது தேதியை அறிவித்துள்ளது. என்றாலும் கடந்த மாதமே அதன் பணிகளை துவக்கி விட்டது.
2014ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ்சுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இயக்குனர் கே.பாக்யராஜ், பால்கி, கே.வி.ஆனந்த், நடிகை நதியா, விமர்சகர் யூகி சேது ஆகியோர் ஜூரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் வீதம் தேர்வுக்கு வந்துள்ள படங்களை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு முதல் டப்பிங் கலைஞர்க, ஒலிப்பதிவாளர் உள்ளிட்ட சில பிரிவுகளை விருதுக்கு சேர்த்திருக்கிறார்கள். பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நடிகர், நடிகைகள் பங்கேற்கும் பிரமாண்ட நடன கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். ஏப்ரலில் பதிவு செய்யப்படும் நிகழ்ச்சி, மே மாத்ததில் ஒளிபரப்பாகும்.