ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் தேசிய பதவி கிடைத்த நேரத்தில் சந்தோஷப்பட படவேண்டிய அவரின் இதயம் நொறுங்கி விட்டது. எதற்கு தெரியுமா? நேற்று நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டின் அரையிறுதி ஆட்டத்தில் கடுமையாக போராடி தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணியை நினைத்து அவர் இதயம் நொறுங்கி விட்டதாம்.
"வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். ஆனால் கடுமையாக போராடிய தென் ஆப்பிரிக்க வீரர்களுக்காக அனுதாப்படுகிறேன். என் இதயமே நொறுங்கி விட்டது போன்று இருக்கிறது. வருகிற 26ந் தேதியும், 29ந் தேதியும் காணாமல் போய்விடுவேன்" என்று தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார். 26ந் தேதி இந்தியா விளையாடும் அரையிறுதி போட்டியும், 29ந் தேதி இறுதிபோட்டியும் நடக்கிறது. அன்று காணாமல் போய்விடுவேன் என்று குஷ்பு குறிப்பிட்டிருக்கிறார்.