'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வருடம் மே மாதம் 'கோச்சடையான்' படத்திற்காக டிவிட்டர் கணக்கை ஆரம்பித்து புதிய சாதனை புரிந்தார் ரஜினி. அப்போது நான்கைந்து பதிவுகளை மட்டும் போட்டு விட்டு, அத்துடன் எந்த பதிவையும் போடுவதையும் ஏழு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி விட்டார். மீண்டும் அவருடைய பிறந்த நாளன்று பிரதமருக்கு வாழ்த்து சொன்னதற்காக நன்றியையும், ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்திருந்தார். அதன் பின் 'லிங்கா' படம் பற்றி பல பிரச்சனைகள் எழுந்த போதும் அது குறித்து எந்த விதமான பதிவையும், கருத்தையும் அவர் பிரச்சனை முடிந்த இதுவரை தெரிவிக்கவில்லை.
இரு தினங்களுக்கு முன் மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவிற்காக ஒரு இரங்கல் செய்தியை தெரிவத்ததன் மூலம் மீண்டும் டிவிட்டரில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். ரஜினிகாந்த் அவருக்கு பிடித்த தலைவராக லீ குவான் யூவைத்தான் எப்போதுமே சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. பல பேட்டிகளிலும் அவரைப் பற்றி உயர்வாக பேசியிருக்கிறார்.
“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் மறைந்தது ஒரு கருப்பு தினமாகும். உங்கள் துக்கத்தை நானும் உணர்கிறேன், சிங்கப்பூர். சிறந்த பாதையை அமைத்துக் கொடுத்த ஒரு அரசியல்வாதியின் உண்மையான இழப்பு,” என்று அவர் லீ குவான் யூ மறைவு பற்றி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் தேவையான சமயத்தில் மட்டுமே பதிவு போடுவதும் ரஜினி ஸ்டைல் போலிருக்கிறது.