இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபகாலமாக பிரபல டைரக்டர்கள், நடிகர்களின் படங்கள் வளர்ந்து கொண்டிருக்கும்போதோ அல்லது படம் வெளியான பிறகோ அந்த கதை என்னுடையது என்று அப்படத்துக்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் போர்க்கொடி பிடித்து தயாரிப்பாளர்களிடம் பணம் பறிப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, விஜய்யின் கத்தி கதை விவகாரம்கூட இன்னமும் தீர்ந்தபாடில்லை.
இந்த நிலையில், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் இப்போது கமல் நடித்துள்ளார். பாபநாசம் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தின் கதை தனது ஒரு மழைக்காலத்து என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நாவலின் ஆசிரியர் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து விட்டார். அதனால் அதுவரை நிறுத்தி வைத்திருந்த பாபநாசம் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது மீண்டும் துரிதமாக தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், பாபநாசம் கதைக்கு எதிராக தொடரப்பட்ட அந்த வழக்கு பற்றி கூறுகையில், இதுபோன்று மற்றவர்களின் கதையை தங்களுக்கு சொந்தமானதாக சொல்லிக்கொண்டு நீதிமன்றத்தை நாடுவது வழக்கமாகி விட்டது. இதை தொடரவிட்டால் எதிர்காலத்தில் படம் எடுப்பவர்கள் இன்னும் நிறைய இன்னல்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.
அதனால் இப்போது நான் ஒரு விசயம் செய்யப்போகிறேன். அதாவது பாபநாசம் கதை என்னுடையது என்று வழக்கு போட்ட அந்த நபருக்கு எதிராக நான் அவர் மீது வழக்கு தொடரப்போகிறேன். அவரை கூண்டில் ஏற்றி அவர் செய்த தவறுக்கு பாடம் கற்பிக்கப்போகிறேன். அவரைப்பார்த்து இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மற்றவர்கள் பயப்பட வேண்டும்.