Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாடகை சைக்கிளில், கசங்கிய ஃபோட்டோவுடன் சென்ற கமல்ஹாசன்...

24 மார், 2015 - 17:23 IST
எழுத்தின் அளவு:
kamalhassan-shares-his-experiences

குழந்தை நட்சத்திரமாக இருந்து, வாலிப வயதை அடைந்ததும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, இன்று உலகம் போற்றும் தமிழ் நடிகராக உயர்ந்திருப்பவர் கமல்ஹாசன். பாலசந்தர் அவரை நடிக்க அழைத்த போது அவர் தன்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளத்தான் கூப்பிடுகிறார் என நினைத்துக் கொண்டுதான் அவரைச் சந்திக்கப் போயிருக்கிறார். அதிலும் நடந்து போனால் நன்றாக இருக்காது என்று வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். இந்தத் தகவலை கமல்ஹாசனே இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.


“உத்தம வில்லன்' படத்தில் நான் திரையுலகத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த பாலசந்தர் அவர்களை வற்புறுத்தி நடிக்க வைத்தேன். இன்று என்னை பலரும் புகழ்வதற்கெல்லாம் அவர்தான் விதை போட்டவர். என்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்க அவருக்குத்தான் முதன் முதலாக அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால், அவர் என்னுடைய தயாரிப்பில் இதுவரை எந்தப் படத்தை இயக்கவில்லை என்பது எனக்குக் குறைதான். இந்த வீட்டிற்கு அவரே வந்து அட்வான்ஸ் செக் வாங்கிக் கொண்டு போனார். நான் வந்து தருகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.


அவரை முதன் முதலாக அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்ததை இப்போது நினைவு கூர்ந்து பார்க்கிறேன். அவர் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளத்தான் கூப்பிடுகிறார் என நினைத்து கிளம்பினேன். என்னுடைய அம்மாதான், ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு போயேன்டா எனச் சொன்னார்கள். உதவி இயக்குனரா சேர்றதுக்கு எதுக்கும்மா போட்டோ, என் திறமையை அங்க அவர்கிட்ட காட்டிக் கொள்கிறேன் என பதிலளித்தேன். இருந்தாலும், இரு கைகளை முடக்கி ஒரு பாடி பில்டர் போல நான் எடுத்து வைத்திருந்த போட்டோ ஒன்றை வேண்டா வெறுப்பாக எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு போனேன். அப்போதெல்லாம் இறுக்கமான பேண்ட், பாக்கெட் கூட கிடையாது. நண்பரின் ஸ்கூட்டரில் போகலாம் என்றால் அதற்குள் அவன் கிளம்பி விட்டான். வெயிலில் வேர்க்க, விறுவிறுக்க போக முடியாது என பக்கத்திலிருந்து ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போய்த்தான் அவரைப் பார்த்தேன்.


என்னுடன் பேச ஆரம்பித்து விட்டு போட்டோ இருக்கிறதா எனக் கேட்டார், இடுப்பிலிருந்து கசங்கிப் போயிருந்த போட்டோவை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு சரி என்று மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசினார். அந்த போட்டோவை அவர் மறக்காமல் இருந்திருப்பார் போல, அந்த போட்டோவில் இருந்ததைப் போன்றே 'அரங்கேற்றம்' படத்திலும் ஒரு காட்சியை வைத்திருப்பார்,” என பாலசந்தர் பற்றிய இனிய சுவாரசிய நினைவுகளையும் பகர்ந்து கொண்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in