இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
குழந்தை நட்சத்திரமாக இருந்து, வாலிப வயதை அடைந்ததும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, இன்று உலகம் போற்றும் தமிழ் நடிகராக உயர்ந்திருப்பவர் கமல்ஹாசன். பாலசந்தர் அவரை நடிக்க அழைத்த போது அவர் தன்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளத்தான் கூப்பிடுகிறார் என நினைத்துக் கொண்டுதான் அவரைச் சந்திக்கப் போயிருக்கிறார். அதிலும் நடந்து போனால் நன்றாக இருக்காது என்று வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். இந்தத் தகவலை கமல்ஹாசனே இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.
“உத்தம வில்லன்' படத்தில் நான் திரையுலகத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த பாலசந்தர் அவர்களை வற்புறுத்தி நடிக்க வைத்தேன். இன்று என்னை பலரும் புகழ்வதற்கெல்லாம் அவர்தான் விதை போட்டவர். என்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்க அவருக்குத்தான் முதன் முதலாக அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால், அவர் என்னுடைய தயாரிப்பில் இதுவரை எந்தப் படத்தை இயக்கவில்லை என்பது எனக்குக் குறைதான். இந்த வீட்டிற்கு அவரே வந்து அட்வான்ஸ் செக் வாங்கிக் கொண்டு போனார். நான் வந்து தருகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.
அவரை முதன் முதலாக அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்ததை இப்போது நினைவு கூர்ந்து பார்க்கிறேன். அவர் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளத்தான் கூப்பிடுகிறார் என நினைத்து கிளம்பினேன். என்னுடைய அம்மாதான், ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு போயேன்டா எனச் சொன்னார்கள். உதவி இயக்குனரா சேர்றதுக்கு எதுக்கும்மா போட்டோ, என் திறமையை அங்க அவர்கிட்ட காட்டிக் கொள்கிறேன் என பதிலளித்தேன். இருந்தாலும், இரு கைகளை முடக்கி ஒரு பாடி பில்டர் போல நான் எடுத்து வைத்திருந்த போட்டோ ஒன்றை வேண்டா வெறுப்பாக எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு போனேன். அப்போதெல்லாம் இறுக்கமான பேண்ட், பாக்கெட் கூட கிடையாது. நண்பரின் ஸ்கூட்டரில் போகலாம் என்றால் அதற்குள் அவன் கிளம்பி விட்டான். வெயிலில் வேர்க்க, விறுவிறுக்க போக முடியாது என பக்கத்திலிருந்து ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு போய்த்தான் அவரைப் பார்த்தேன்.
என்னுடன் பேச ஆரம்பித்து விட்டு போட்டோ இருக்கிறதா எனக் கேட்டார், இடுப்பிலிருந்து கசங்கிப் போயிருந்த போட்டோவை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு சரி என்று மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசினார். அந்த போட்டோவை அவர் மறக்காமல் இருந்திருப்பார் போல, அந்த போட்டோவில் இருந்ததைப் போன்றே 'அரங்கேற்றம்' படத்திலும் ஒரு காட்சியை வைத்திருப்பார்,” என பாலசந்தர் பற்றிய இனிய சுவாரசிய நினைவுகளையும் பகர்ந்து கொண்டார்.