டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உத்தமவில்லன் படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் கமல். செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் நடைபெற்றது. உத்தமவில்லன் படம் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த கமலிடம் விஸ்வரூபம் - 2 பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டன.
விஸ்வரூபம் 2 படம் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான் காரணம் என்று குற்றம்சாட்டிய கமல் தாமதப்படுத்துவதற்கு அவர் சொல்லும் காரணங்கள் எதுவும் ஏற்கும்படி இல்லை என்றும் காட்டமாக சொன்னார் கமல். கமல் என்கிற மிகப்பெரிய நடிகரை வைத்து தயாரித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை முடிக்காமல் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்த என்ன காரணம்? என்று கேட்கப்பட்டது.
"எங்களுக்குள் நிச்சயமாக கருத்து வேறுபாடு கிடையாது. என்று முதலில் சமாளித்த கமல் பிறகு மனம் திறந்து பேசினார்...
இந்தப் படம் தாமதமாவதற்கு சில காரணங்களைச் சொல்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவை நிச்சயம் ஏற்கும்படி இல்லை என்பதுதான் உண்மை. அவர் பணக்கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்துகிறார் என்றுதான் புரியவில்லை" என்றார் வருத்தமாக.
விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே, இரண்டாம் பகுதியின் பெருமளவு காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார் கமல்.