'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
எத்தனை மியூசிக் ஆல்பங்கள் வெளிவந்தாலும் அத்தனை ஆல்பங்களும் ஹிட்டாவதில்லை. அப்படியே ஹிட்டானாலும் அதன் இசையமைப்பாளருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. இந்த விஷயத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அதிர்ஷ்டக்காரர் மட்டுமல்ல அசாத்திய திறமைசாலியும் கூட.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் மூலம் தமிழ்த்திரையிசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார் ஆதி.
ஹிப் ஹாப் தமிழா ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து, இன்று நேற்று நாளை படத்துக்கு அவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தனர்.
சி.வி.குமார் தயரிரிக்கும் இந்தப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக முடங்கிப்போனது. பின்னர் பைனான்ஸ் வாங்கி ஒருவரியாக படத்தை முடித்தனர்.
ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி பல மாதங்களாகியும் இன்று நேற்று நாளை படம் வெளிவரவில்லை. எனவே சுந்தர்.சி. மூலம் விஷாலின் ஆம்பள படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார். ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தனது முதல் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து அவரைத் தேடி தற்போது பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம்.
இன்று நேற்று நாளை படம் வெளிவரவதற்கான அறிகுறியே இல்லாததினால் அந்தப் படத்தை மறந்துவிட்டு, தற்போது ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்திற்கு இசையமைக்கும் வேலையில் பிஸியாகிவிட்டார் ஆதி. தனி ஒருவன் படத்திற்காக ஆதியின் இசையில் தற்போது ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுவிட்டதாம்.