ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
பாடலாசிரியர் தாமரையின் கணவர் தியாகு. தாமரையும், தியாகுவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாமரை கணவர் வீட்டைவிட்டு சொல்லாமல் ஓடிவிட்டார் அவருடன் சேர்த்து வையுங்கள் என்று தொடர் தர்ணா போராட்டம் நடத்தினார். பின்னர் தியாகுவே நேரடியா வந்து மன்னிப்பு கேட்டதும் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார். 60 வயதை தாண்டிய தியாகுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தாமரை குற்றம் சாட்டியிருந்தார். இதையொட்டி டுவிட்டர் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தாமரைக்கு ஆதரவாகவும் தியாகுவை விமர்சித்தும் கமெண்டுகள் குவிந்து வருகிறது. இதில் சில தியாகுவை கடுமையாக விமர்சிக்கிறது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 23) தியாகு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தார். தன்னை பற்றி சமூக வளைத்தளங்களில் அவதூறாக செய்திகளை வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு மீது சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.