மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆர்யாவின் தம்பி சத்யா பெங்களூரில் படித்துக்கொண்டிருந்தவர். அவ்வப்போது சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த அவர், ஆர்யாவை சந்திக்க செல்லும் சினிமாக்காரர்களின் கண்ணில்பட்டார். விளைவு, உங்க வீட்டில் இன்னொரு ஹீரோ ரெடியாகிக்கிட்டிருக்காரு போல என்று ஆர்யாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அது சத்யாவின் காதிலும் விழுந்திருக்கிறது.
விளைவு, நானும் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று தனது ஆசையை அண்ணன் ஆர்யாவிடம் அவுட் பண்ணியிருக்கிறார். அது ஆர்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. சினிமாவில் ஜெயிக்கிறது அத்தனை சுலபமான விசயமல்ல என்று அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால் தம்பி சத்யா கேட்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் படித்துறை என்று சொந்த படமெடுத்தே சத்யாவை அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
அதையடுத்து புத்தகம், அமரகாவியம், எட்டுத்திக்கும் மதயானை போன்ற படங்களில் நடித்த சத்யா, இப்போதும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் வெற்றிபெறவில்லை. இருப்பினும் சத்யாவை வைத்து படம் பண்ணினால் ஆர்யா ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்வார் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து சத்யாவிடம் கதை சொல்லி வருகிறார்கள் டைரக்டர்கள்.