பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
மோகன்லால் - சத்யன் அந்திக்காடு இருவரின் கூட்டணியில் உருவாகும் 15வது படம் என்னும் எப்பொழும். இதில் மோகன்லாலுடன் சேர்ந்து கதையின் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். மோகன்லால் ஒரு பெண்கள் மேகசினுக்கு சீனியர் ரிப்போர்ட்டராகவும் மஞ்சு வாரியார் குடும்ப நல வக்கீலாகவும் நடித்திருக்கிறார்கள். 'வனிதார்த்தனம்' என்கிற பெண்கள் மாத இதழில் சீனியர் ரிப்போர்ட்டராக வேலைபார்க்கும் மோகன்லாலுக்கு அட்வகேட்டான மஞ்சு வாரியரை இன்டர்வியூ பண்ணிவிட்டு வர அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது.
ஆனால் மஞ்சுவோ தனது வக்கீல் பணியிலும், அதுதவிர சமூக சேவைகளிலும் பிஸியாக இருப்பதால் எப்படியாவது மஞ்சுவை இன்டர்வியூ பண்ணிவிட வேண்டும் என அவர் போகுமிடம் எல்லாம் பின்னால் தொடர்கிறார் மோகன்லால். மஞ்சு பெண் வக்கீல் தான் என்றாலும் சில குண்டர்களின் கேசில் ஆஜராகி அவர்களுக்கு விடுதலை வாங்கி தருகிறார். மஞ்சுவிடம் வரும் ஒரு பெரியம்மா, தனது மகன் வீடு, பண்ம் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு தன்னை விரட்டிவிட்டதாகவும், கேட்டால் அடிப்பதாகவும் சொல்லி அவன் மீது வழக்குபோட கேட்கிறார்.