இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள இளம் முன்னணி ஹீரோவான பிருத்விராஜுக்கு ஒரு கட்டத்தில் இந்தி சினிமா சிவப்பு கம்பளம் விரிக்கத்தான் செய்தது.. அந்தவகையில் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் ராணிமுகர்ஜியுடன் 'அய்யா', யாஷ்ராஜ் ஃப்லிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்த 'ஔரங்கசீப்' என இரண்டு இந்திப்படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களும் சரியாக போகாததால், பாலிவுட் நமக்கு சரிப்பட்டு வராதோ என்கிற குழப்பத்தில் கொஞ்சநாள் இருந்தார்.
கொஞ்ச காலம் கழித்து மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பிருத்விராஜை தேடிவந்தது. ஆனால் அப்போதுதான் தமிழில் வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்' படத்தில் நடிப்பதற்காக தேதிகளை மொத்தமாக அள்ளிக்கொடுத்திருந்தார். தவிர பாலிவுட்டில் நடிப்பதைவிட, 'காவியத்தலைவன்' தனக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் என மனக்கணக்கு போட்ட பிருத்விராஜ், அதன் அடிப்படையில் அந்த இந்திப்பட தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை.