ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி நந்திதா நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. என்றாலும் விஜயசேதுபதியுடன் அவர் நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவர் நடித்த குமுதா கேரக்டர்தான் டைரக்டர்களின் மனதில் இடம்பிடித்துள்ளதாம்.
அதனால், அதையடுத்து அவருக்கு ஒப்பந்தமான முண்டாசுப்பட்டி, இடம் பொருள் ஏவல், உப்புக்கருவாடு, அஞ்சல போன்ற படங்களில் நடிக்க அழைத்தபோது, அந்த படங்களின் டைரக்டர்கள் குமுதா கேரக்டர் ரொம்ப யதார்த்தமாக இருந்தது. அதே மாதிரி நடிக்கிற மாதிரியே தெரியாத அளவுக்குத்தான் நடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் அவரை ஒப்பந்தம் செய்தார்களாம்.
ஆக, தற்போது நடித்து வரும் படங்களிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, தான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டர்களையும் உள்வாங்கும் நந்திதா, அந்த கதாபாத்திரத்தின் தன்மை கொண்டவர்கள் எபபடி பேசுவார்கள். எந்த மாதிரி நடப்பார்கள். எந்தமாதிரி பேசுவார்கள் என ஒவ்வொரு விசயத்தையும் ஆராய்ந்து நடித்து வருகிறாராம்.
இதுபற்றி நந்திதா கூறுகையில், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பெண்ணாக என்னை அந்த டைரக்டர் மாற்றினார். ஆனால் எனது கோ ஆர்ட்டிஸ்டான விஜயசேதுபதி, நான் இந்த மாதிரி உன்னை வெறுப்பேற்றும்போது இப்படி இப்படி நீ ரியாக்சன் கொடு நன்றாக இருக்கும் என்றும் டிப்ஸ் கொடுத்தார். அதனால் அவரும், டைரக்டரும் சொன்ன விசயங்களை நான் பிரதிபலித்தேன். ஆக, குமுதா கேரக்டர் இந்த அளவுக்கு ரீச் ஆனதற்கு அவர்கள் இரண்டுபேருமே காரணம் என்று சொல்லும் நந்திதா, இப்போது விஜயசேதுபதியுடன் நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படத்திலும் அவர் தனக்கு பல டிப்ஸ்களை கொடுத்ததாகவும் சொல்கிறார்.