பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
18 வயசு படத்தில் அறிமுகமான காயத்ரிக்கு, விஜயசேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் நல்லதொரு என்ட்ரியை கொடுத்து. அந்த படத்தில் ஒரேயொரு காட்சியில் நடித்தபோதும் அவர் எங்கு சென்றாலும் ப்பா ப்பா -என்று ரசிகர்கள் அவரை கிண்டல் செய்யத் தொடங்கினர். அதன்பிறகு பொன்மாலைப்பொழுது, மத்தாப்பு, ரம்மி ஆகிய படங்களில் நடித்த காயத்ரி, தற்போது உலா, மெல்லிசை என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் மெல்லிசை படத்தில் மீண்டும் விஜயசேதுபதியுடன் இணைந்திருக்கிறார். கதைப்படி விஜயசேதுபதி இசையமைப்பாளராக நடிக்க, காயத்ரி பாடகியாக நடித்துள்ளார்.
இதையடுத்து காயத்ரிக்கு எந்த புதிய படமும் புக்காகவில்லை. ஆனபோதும் மெல்லிசை வெளியானால் தனக்கு ஏதாவது புதிய படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே தற்போதைக்கு அவரிடம் உள்ளது. மேலும், பெங்களூர்வாசியான அவர், வேலைவெட்டி இல்லாமல் சென்னையில் இருக்க போரடிப்பதால், இப்போது பெங்களூரில் முகாமிட்டிருக்கிறார். ஏற்கனவே விஜயசேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு புதிய படங்கள் கிடைத்த மாதிரி இந்த மெல்லிசை படத்துக்கு பிறகும் படங்கள் கிடைத்தால்தான் மறுபடியும் அவர் சென்னைக்கு விஜயம் செய்வாராம்.