ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. அவர் நேரடியாக நடித்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருதினார்கள். இதை மனதில் கொண்டு ரஜினி அடுத்த 6 மாத்திற்குள் தான் நேரடியாக நடித்த படம் ஒன்றை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். 8 மாதத்திற்குள் ஒரு படத்தை இயக்கிவிடுவீர்களா என்று கே.எஸ்.ரவிகுமாரை கேட்டார். தயாரிக்க முடியுமா என்று தன் நண்பர் ராக்லைன் வெங்கடேசை கேட்டார். இருவரும் செய்யலாம் என்று உறுதிபட சொல்லவே அவர்களை நம்பி லிங்காவைத் தொடங்கினார். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரி படம் அமையும் என்ற ரஜினி எதிர்பார்க்கவில்லை. அதிரிபுதிரி எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு. அந்த எதிர்பார்ப்பையும் லிங்காவால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
படத்தின் பட்ஜெட்டை கணக்கிடும்போது லிங்கா லாபமான படம்தான். ஆனால் அளவுக்கு மீறிய அதன் வியாபாரம்தான் பல்வேறு சிக்கல்களை உண்டாக்கியது. லிங்கா விநியோகஸ்தர்கள் தங்களுக்கு 33 கோடி நஷ்டம் என்று கொடிபிடிக்க லிங்காவின் இமேஜ் அப்படியே கவிழ்ந்து விட்டது. இப்போது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடுடன் பிரச்சினை முடிந்திருக்கிறது.
ரஜினி இதுகுறித்து வெளிப்படையாக பேசாவிட்டாலும் நிச்சயம் அவர் மனம் வருந்தியிருப்பார். சிலரை நம்பி அவசரப்பட்டுவிட்டோமோ என்று கருதியிருப்பார். நல்லெண்ண அடிப்படையில் நஷ்டஈட்டை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்ததும் ரஜினிதான்.