இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வெண்ணிலா கபடிக்குழு, அழகர் சாமியின் குதிரை, பாண்டியநாடு ஆகிய படங்களை கிராமத்து கதைகளில் இயக்கினார் சுசீந்திரன். இதில் பாண்டியநாடு படத்தை மதுரை கதைக்களத்தில் இயக்கினார். ஏராளமான படங்கள் மதுரை பின்னணியில் தயாராகியிருந்தபோதும், தனது பாணியில் சற்று வித்தியாசப்படுத்தியும் படம் பண்ணியிருந்தார் அவர். இந்த நிலையில், அதையடுத்து புதுமுகங்களை வைத்து நேருக்கு நேர் என்றொரு படத்தை கடந்த சில மாதங்களாக படமாக்கி வந்த சுசீந்திரன் அப்படத்தை கோவையில் நடக்கும் கதையில் இயக்கியிருக்கிறாராம். ராஜபாட்டை படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படம் போன்று இதுவும் ஒரு வித்தியாசமான கதையில் தயாராகியுள்ளதாம்.
அதையடுத்து, இப்போது விஷாலை இயக்கும் பெயரிடப்படாத படத்தை தற்போது தொடங்கி விட்டார் சுசீந்திரன். விஷால் நடித்த பாண்டியநாடு படத்தைப்போலவே இதுவும் மதுரையில் நடக்கும் கதை என்றபோதும், இந்த படத்தை கிராமத்து கதையாக இல்லாமல் நகரத்தில் நடிப்பது போன்று படமாக்குகிறாராம் அவர். மேலும், ஏற்கனவே விஷால், சத்யம் உள்பட சில படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தபோதும், இப்படத்தில் இதுவரை பார்க்காத விஷாலை பார்க்கலாமாம். அந்த அளவுக்கு அதிரடி போலீசாக நடிக்கும் விஷால், சமூக விரோதிகளை வேட்டையாடும் வெறித்தனமான நடிப்பு புதிய கோணத்தில் படமாக்கப்படுகிறதாம்.