தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2010ல் ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்த கவுண்டமணி அதன்பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். அப்படியிருந்த அவரை, மீண்டும் காமெடியனாக கொண்டு வராமல் 49 ஓ படம் மூலம் ஹீரோவாக களமிறக்கியுள்ளனர். தற்போது 75 வயதான கவுண்டர், அந்த படத்தில் விவசாயி வேடத்தில் நடித்திருக்கிறார். அதையடுத்து, வாய்மை என்ற படத்தில் கோட்டு சூட் அணிந்து மாடர்ன் கெட்டப்பிலும் நடித்திருக்கிறார்.
ஆனால், அந்த இரண்டு படங்களுமே இன்னும் வியாபாரமாகவில்லை. அதனால் இதோ அதோ என்ற ரிலீஸ் தேதியை இழுத்துக்கொண்டே வருகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் மீண்டும் கவுண்டமணியை வைத்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தை இயக்க தயாராகி வருகிறார் புதுமுக டைரக்டர் கணபதி பாலமுருகன்.
ஆனால், தற்போது எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற பெயரில் இன்னொரு படமும் தயாராகி வருவதால், விசயம் கவுண்டமணியின் காதுக்கு சென்றதில் இருந்தே டென்சனில் காணப்படுகிறாராம். ஏற்கனவே தான் நடித்து வெளியான இரண்டு படங்களையும் வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே டைட்டில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம் கவுண்டமணி.