டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தபோது பெங்களூர் நடிகையான நந்திதாவுக்கு கோடம்பாக்கமே புதிது என்பதால் சில சினிமா மேனேஜர்களை நம்பித்தான் அவர் இருக்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் மேனேஜர்கள் மூலம் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி படவாய்ப்புகளை பெற்று வந்தார் நந்திதா. ஆனால், அப்படி அவருக்கு படம் வாங்கிக்கொடுத்த சில மேனேஜர்கள், கம்பெனியில் ஒரு தொகை பேசிவிட்டு, இவரிடம் அதைவிட குறைவான தொகையை சொல்லி ஒப்பந்தம் செய்து விட்டுள்ளனர். ஆக, 10 லட்சம் சம்பளம் பேசினால் நந்திதாவிடம் ஐந்து லட்சம்தான் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இப்படி தொடர்ந்து தன்னை மேனேஜர்கள் மோசடி செய்ததை சமீபத்தில்தான் கண்டுபிடித்திருக்கிறார் நந்திதா. அதனால்தான் தன்னை ஏமாற்றி வந்த மேனேஜர்கள் தற்போது விரட்டியடித்து விட்டார் நந்திதா. அதேசமயம், இனி எனது அம்மா,அப்பாவே எனக்கு மேனேஜர்களாக செயல்படுவார்கள் என்று அவர் அறிவித்தபோதும், தானே கதை கேட்பது மட்டுமின்றி கால்சீட், சம்பளம் அனைத்தையும் பேசுகிறார் நந்திதா. தற்போது சினிமா அவருக்கு அத்துபடியாகி விட்டதால், ஆல் இன் ஆல் அழகுராஜாவாகியிருக்கிறார் அட்டகத்தி நந்திதா.