600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படப்பிடிப்பு ஆரம்பத்தில் சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரண்மனை செட்டில் நடைபெற்றது. விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா சம்பந்தப்பட்ட சரித்திர கெட்டப் காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டு வந்தது. அதோடு காமெடி காட்சிகளும் அங்குதான் படமானது. பின்னர் 2 மாதங்களுக்குப்பிறகு அங்கிருந்து கேரளா சென்றது புலி யூனிட். அங்குள்ள அடர்ந்த காடு மற்றும் மலைப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. அப்போதுதான் விஜய், ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகள் மட்டுமின்றி, பாடல்களும் படமானது. தற்போது கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்தி விட்டு சென்னை திரும்பி விட்டனர்.