‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானவர் சூர்யா. அந்த படத்தில் விஜய்யும் நடித்திருந்தார். ஆனால் அதையடுத்து காதலே நிம்மதி என்ற படத்தில் தனி ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சூர்யா, பெரியண்ணா படத்தில் விஜயகாந்துடனும், ப்ரண்ட்ஸ் படத்தில விஜய்யுடனும் மீண்டும் இணைந்து நடித்தார்.
அதன்பிறகு, பாலாவின் நந்தாவுக்கு பிறகு அவருக்கென ஒரு இமேஜ் உருவானது. அதோடு கவுதம்மேனன் இயக்கிய காக்க காக்க படம் சூர்யாவுக்கு பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஆக, தனது 18 ஆண்டுகால சினிமா பயணத்தில் தற்போது அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை கைப்பற்றியுள்ள சூர்யாவுக்கு ஆண்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் நிறைய உள்ளனர்.
அதனால், சூர்யா அவுட்டோர்களுக்கு படப்பிடிப்புக்காக செல்லும்போது இளைஞர்களும், இளைஞிகளும் அவரை காண படையெடுக்கிறார்களாம். அப்படி வரும் ரசிக ரசிகைகளை, யூனிட்காரர்கள் விரட்டியடித்தால் அதை தடுக்கிறாராம் சூர்யா. அவர்களை தான் நடிப்பதை ஒரு ஓரமாக நின்று ரசிக்க வைப்பவர், பின்னர் தனக்கான ஷாட் முடிந்ததும் அவர்களுடன் உரையாடுகிறாராம். அப்போது தனது நடிப்பில் உள்ள நிறைகுறைகளை ரசிகர்களிடம் கேட்டறியும் சூர்யா, அவர்களுடன் நின்று போட்டோக்களையும் எடுத்துக்கொள்கிறாராம்.
இதனால் அவரை பார்க்கவே முடியுமோ முடியாதோ என்ற எண்ணத்துடன் வந்த ரசிகர்கள் அவர் தங்களிடம் சந்தோசமாக பேசியதோடு, போட்டோவும் எடுத்துக்கொள்வதால் அளவில்லா மகிழ்சசியுடன் திரும்புகிறார்களாம்.