‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
என்ன பிரச்சனை என மம்முட்டியின் ரசிகர்கள் யாரும் கொடிபிடித்து கிளம்பவேண்டாம்.. மம்முட்டிக்கும் ஜெயசூர்யாவுக்கும் நடப்பது ஆரோக்கியமான போட்டிதான்.. அப்படி எதில் போட்டி போடுகிறார்கள்..? கடந்த ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது பட்டியல் மே மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது அல்லவா? இந்த விருது பட்டியலில், சிறந்த நடிகர்களுக்கான இறுதி செய்யப்பட்டுள்ள பட்டியலில் மம்முட்டி (முன்னறியிப்பு), ஆமிர்கான் (பிகே) மற்றும் ஷாகித் கபூர் (ஹைதர்) இவர்களுடன் ஜெயசூர்யாவும் 'அப்போதிகேறி' படத்திற்காக இடம்பெற்றுள்ளாராம்.
வேணு என்பவர் இயக்கிய 'முன்னறியிப்பு' படத்தில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியாக, மிகவும் மாறுபட்ட நடிப்பால் மிரட்டியிருந்தார் மம்முட்டி.. மாதவ் ராமதாஸ் என்பவர் இயக்கிய 'அப்போதிகேறி' படத்தில் சிரித்தாலோ அல்லது அழுதாலோ காது வலி உண்டாகும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார் ஜெயசூர்யா. சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோன அவரது ஆன்மா டாக்டரான சுரேஷ்கோபியை காப்பற்ற நடத்தும் போராட்டம் தான் படத்தின் கதை.
சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இப்போது ஆமிர்கானும் ஷாஹித் கபூரும் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ள இறுதிப்பட்டியலில் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் மட்டும் தான் இருக்கிறார்களாம். விருது வழங்கும் ஜூரிகளில் நம்ம இயக்குனர் பாக்யராஜும், மலையாள இயக்குனர் கமலும் இருக்கிறார்கள் என்பதால், மம்முட்டிக்கோ அல்லது ஜெயசூர்யாவுக்கோ தேசிய விருது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.