புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
அனிருத் நாளுக்கு நாள் மேலே ஏறிக் கொண்டே போய்க் கொண்டேயிருக்கிறார். இன்னும் முழுதாக பத்து பத்துப் படங்கள் கூட தனுஷ் இசையமைத்து முடிக்கவில்லை. அதற்குள் அவருக்கு மிகப் பெரிய வாய்ப்புகளாக வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர்தான் அஜித் படத்திற்கு இசையமைக்கப் போவதாக அனிருத் அறிவித்தார்.
இப்போது விக்ரம் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். விக்ரம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'பத்து எண்ணுறதுக்குள்ள' படத்தையடுத்து 'அரிமா நம்பி' படத்தையடுத்து ஆனந்த் சங்கர் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், பிரியா ஆனந்த் நாயகிகளாக நடிக்க உள்ளார்கள்.
இந்தப் படத்திற்கும் இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் இசையில் தற்போது “ஆகோ, மாரி, நானும் ரெளடிதான்” ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது அஜித், விக்ரம் படங்களும் இணைந்துள்ளன. ஆக, இந்த ஆண்டில் இப்போதே தன்னுடைய இடத்தை அனிருத் நிரப்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.