ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளிவர உள்ள ஓ காதல் கண்மணி படத்திற்கு வெளியீட்டு நேரத்தில் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். மணிரத்னம் இதற்கு முன் இயக்கிய கடல் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அந்தப் படத்தை அப்போது மிகப் பெரிய விலை கொடுத்து மன்னன் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியதாம். அந்தப் படம் சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாம். அப்போதே நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும் என மன்னன் பிலிம்ஸ் நிறுவனம் மணிரத்னத்தை அணுகியிருக்கிறது. ஆனால், அவர்கள் அப்படி எதையும் தராமல் இழுத்தடித்திருக்கிறார்கள்.
இப்போது ஓ காதல் கண்மணி படத்தின் தமிழ்நாடு உரிமையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்களாம். வினியோகஸ்தர்கள் வந்து மணிரத்னத்திடம் பிரச்சனை செய்ய முயன்றால், அவர் படத்தை நான் வைத்து வியாபாரம் செய்யவில்லை. முழுவதுமாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு விற்றுவிட்டேன், நீங்கள் அவர்களைப் போய்க் கேளுங்கள் என்று சொல்வதற்கு வசதியாகத்தான் இந்த வியாபாரப் பரிமாற்றம் என்கிறார்கள். மணிரத்னத்திற்கு கடல் படத்தின் வெளியீட்டின் போது ஆலோசகராக இருந்து நஷ்ட ஈட்டைக் கொடுக்க வேண்டாமென ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாதான் ஐடியா கொடுத்தாராம். அதனால்தான் இப்போது அவர்களிருவரும் வினியோகஸ்தர்களை சமாளிக்க இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள்.