தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு படம் வெற்றியடைந்தால்தான் அந்தப்படத்தில் நடித்த நட்சத்திரங்களையோ... இயக்குநரையோ அடுத்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்வார்கள்.
தோல்விப்படம் கொடுத்தவர்கள் என்றால் அவர்களை வைத்து மறுபடி படம் எடுக்கவே மாட்டார்கள். இதுதான் திரையுலக வழக்கம்.
இதற்கு மாறாக, இரண்டாம் உலகம் தோல்விப்படத்தில் நடித்த நட்சத்திரங்களான ஆர்யா மற்றும் அனுஷ்காவை வைத்து புதிய படத்தைத் தயாரிக்கிறது பிவிபி சினிமா நிறுவனம். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் தயாராகும் இப்படத்திற்கு, தமிழில் இஞ்சி இடுப்பழகி எனவும், தெலுங்கில் சைஸ் ஜீரோ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே.எஸ்.பிரகாஷ் இந்த இஞ்சி இடுப்பழகியை இயக்குகிறார். இந்தப் படத்தில்தான் ஆர்யாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார்.
கனிகா திலோன் கோவேலமுடி இப்படத்திற்கான கதையை எழுத, பாடல்களை எழுதுகிறார் மதன் கார்க்கி.
இரண்டாம் உலகம் என்ற படு தோல்விப்படத்தில் நடித்த ஜோடியை பிவிபி சினிமா மீண்டும் ஒப்பந்தம் செய்தது ஏன்? இரண்டாம் உலகம் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தைக் காரணம் காட்டி ஆர்யா, அனுஷ்கா இருவரையும் பாதி சம்பளத்துக்கு நடிக்க சம்மதிக்க வைத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பட்ஜெட்டில் பல கோடி மிச்சமாகி உள்ளது.