ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஞ்சலிக்கு இயற்கையிலேயே ரசிப்புத்தன்மை கொஞ்சம் ஜாஸ்தி என்கிறார்கள். அதன்காரணமாக அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பசுமையான எழில்மிகுந்த லொகசேன்களை கண்டுவிட்டால் பயங்கரமாக ரசிக்கிறாராம். அதிலும் அடர்ந்த மலைபிரதேசங்களை மற்றவர்களெல்லாம் தூரத்தில் நின்றபடியே ரசிக்க, இவரோ அருகில் சென்று ரசித்தே ஆக வேண்டும் என்ற தனது உதவியாளர்களை கூட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறாராம்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் அஞ்சலிக்கு அதிகம் பிடித்த இடங்களில் குற்றாலத்துக்குத்தான் முதலிடமாம். ஜெயம்ரவியுடன் நடித்துள்ள அப்பாடக்கர் படத்துக்காக அவர் குற்றாலம் சென்றபோது அங்கு வானத்தை தொட்டு நின்ற மரங்களின் அழகையும், அலை ஆடை களையாமல் தலையாட்டிய அருவிகளையும் மனம்குளிர ரசித்தாராம்.
அதோடு, பொதுமக்கள் கூடாத வேறொரு பகுதிக்கு சென்று ஒருநாள் அருவியிலும் குளித்தாராம். தான் எப்படியேனும் குளித்தே ஆக வேண்டும் என்று அஞ்சலி அடம் பிடித்ததை அடுத்து அவருடன் சென்றவர்கள் குற்றாலம் அருவி பகுதியில் உள்ள அலுவலர்களிடம் சொல்ல, அஞ்சலி குளிப்பதற்கென்று தனி இட வசதி செய்து கொடுத்தார்களாம். அதையடுத்து, அருவியில் சின்னக்குழந்தையாட்டம் துள்ளிக்குதித்தபடி நீராடி மகிழ்ந்திருக்கிறார் அஞ்சலி.