‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கதாநாயகிகள் என்றாலே அவர்கள் 2 பாடல்களில் வந்து ஹீரோவுடன் நடனமாடுவதைப்போல்தான் பெரும்பாலான படங்களில் யூஸ் பண்ணி வருகிறார்கள். அதனால் தொடர்ந்து அப்படியே நடிக்க வைப்பதால் போரடித்துப்போகும் சில நடிகைகள் எங்களை பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய காட்சிகளிலும் நடிக்க வையுங்கள் என்று டைரக்டர்களை கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இந்த விசயத்தில் சமந்தா ரொம்ப வித்தியாசமானவராக இருக்கிறார். அதாவது, எந்த படமாக இருந்தாலும் ஒரு 3 பாடல்களிலாவது நான் நடனமாட வேண்டும் என்று கேட்டு வாங்கி நடிக்கிறாராம். காரணம், தெலுங்கு சினிமாவில் தனது நடனத்தின் மூலமே பெருவாரியான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சமந்தா, தமிழிலும் அதேபோல் நடனத்தினால் ரசிகர்களை இழுக்க வேண்டும் எனறு ஆசைப்படுகிறாராம்.
அந்தவகையில், அஞ்சான், கத்தி படங்களிலேயே தனது நடனத்திறமையை நிரூபித்து விட்ட சமந்தா, இயற்கையிலேயே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், ஒவ்வொரு படங்களிலுமேதான் ஸ்பாட்டுக்கு வந்து நடனத்தை ரிகர்சல் பார்ப்பதிலையாம். படப்பிடிப்புக்கு முன்பே சம்பந்தப்பட்ட நடன மாஸ்டர்களை வரவைத்து, ஆட வேண்டிய பாடலைப்போட்டு ஓரளவு ரிகர்சல் பார்த்துக்கொண்டே ஸ்பாட்டுக்கு வருகிறாராம். மேலும், சமந்தாவுக்கு நடனத்தை மையமாகக்கொண்ட ஒரு அதிரடியான படத்தில் நடிக்க வேண்டும் என்கிற எதிர்கால ஆசையும் உள்ளதாம்.